முஸ்லிம் முதியவர் படுகொலை – பஜக பிரமுகர் உட்பர 22 பேர் கைது!

Share this News:

லக்னோ (09 செப் 2022):உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் முஸ்லிம், முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை அன்று 55 வயதான முஸ்தகீமின் ஆடு ஒன்று அவரது பக்கத்து வீட்டுக்காரரான சந்தீப்பின் வயலில் அலைந்ததை அடுத்து, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது, அன்று மாலை, முஸ்தகீமின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த முஸ்தகிம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தாக்குதலில் அவரது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவராக உள்ள அசோக் குமார் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *