பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் இனரீதியிலான நச்சுக் கருத்து!

Share this News:

போபால் (14 டிச 2020): பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் மீண்டும் இனரீதியான அவதூறுகளை பரப்பி சர்ச்சசையில் சிக்கியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபாலில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், சூத்ராவை த்ராவை சூத்ரா என்று அழைப்பது எப்படி தவறாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாங்கள் சத்ரியரை சத்திரியர் என்றே அழைக்கிறோம், அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பிராமணரை ஒரு பிராமணர் என்று அழைப்போம் , அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வைஷ்யரை ஒரு வைஷ்யர் என்று அழைப்பது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது, ஆனால் ஒரு சூத்ரரை சூத்திரா என்று அழைத்தால், அவர்கள் மோசமாக உணர்கிறார்கள் . இதற்கு காரணம் என்ன?”, என்று பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பிரக்யா சிங் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் இதுபோன்ற கருத்துக்களுக்காக கண்டிக்கப்பட்ட போதிலும், பிரக்யா தாக்கூர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் மீது வங்காள விஜயத்தின் போது தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரக்யா சிங் தாக்கூர் இந்த சர்சசை கருத்தை தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *