ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

Share this News:

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 26 சதவீதம். இதற்கிடையில் பாஜகவின் வாக்கு வங்கி அசைக்கப் படவில்லை.

182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. 2017ல் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் பதினெட்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. முந்தைய தேர்தலை விட 60 இடங்கள் குறைவு. ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கடந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது. மூத்த தலைவர் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து கட்சிக்கு உதவினார். ஆனால் இப்போது பாரத் ஜோடோ சுற்றுப்பயணத்தில் இருக்கும் ராகுல், குஜராத்தில் சுறுசுறுப்பாக இருக்கவில்லை.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *