ஆற்றில் வீசப்பட்ட கொரோனவால் உயிரிழந்த உடல்!

Share this News:

லக்னோ (30 மே 2021): உத்திர பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் ஆற்றில் வீசப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோவில் பாதுகாப்பு உடை அணிந்த இரண்டு ஆண்கள், ராப்தி ஆற்றில் இறந்த உடனை வீசுவது தெளிவாக உள்ளது

அந்த உடல் கொரோனாவால் உயிரிழந்தவருடையது என்பதை பால்ராம்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே உத்திர பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான உடல்கள் கங்கையில் தூக்கி வீசப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *