கேவலப்பட்ட குஜராத் மாடல் – விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவு!

Share this News:

அகமதாபாத் (03 ஜூலை 2022): குஐராத்தில் தேர்தல் முறைகேடு மூலம் அமெரிக்கா சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களால் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் நின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், முறைகேடாக மதிப்பெண் பெற்றிருந்தது தெரிய வந்தது.

‘ஐ இ எல் டி எஸ்’ என்பது ஆங்கில மொழி புலமைக்கான சர்வதேச தரப்படுத்தப்பட்ட சோதனை தேர்வாகும். இதில் தேர்வாகும் மதிப்பெண்கள் மூலம் அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் சென்று பயில முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது.

ஆனால், ஆங்கிலம் பேசத் தடுமாறிய மாணவர்கள், ஆங்கிலப் புலமை தேர்வில் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று எப்படி கனடா வந்தார்கள்? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி அமெரிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, முதற்கட்ட விசாரணையில், குஜராத்தில் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடைபெற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில், தேர்வறையில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கச் செய்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

புத்திசாலித்தனமான மாணவர்கள் கூட இத்தேர்வில் 5 அல்லது 6 மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். அப்படியிருக்கையில், இந்த மாணவர்கள் முறைகேடாக அதிக மதிப்பெண் பெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *