மாணவர்கள் மத அடையாளங்களுடன் எந்த ஆடையும் அணியக்கூடாது – கர்நாடக நீதிமன்ற நீதிபதி!

Share this News:

பெங்களூரு (10 பிப் 2022): மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வியாழக்கிழமை தெரிவித்தார்.

கர்நாடகாவில் பள்ளி ,கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், இதனை அனுமதிக்கக் கோரி, நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்லூரியில் மாணவர்கள் ‘ஹிஜாப்’ அணிவதற்கு மாநில அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மனுக்களை விசாரித்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படலாம், ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை எந்த மாணவரும் மதம் சார்ந்த எதையும் அணியக்கூடாது என்று கூறினார்.

மேலும் இந்த வழக்கை திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு உயர்நீதிமன்றம் விசாரிக்கும் எனவும் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *