உதவி செய்வதாகக் கூறி கடத்திச்சென்று முஸ்லீம் வயோதிகர் மீது கொடூர தாக்குதல்!

Share this News:

காஜியாபாத் (14 ஜூன் 2021): உத்திர பிரதேசத்தில் மசூதிக்கு சென்ற முஸ்லீம் வயோதிகரை மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறி இந்து இளைஞர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் அப்துல் சமத் சைஃபி என்ற வயோதிகர் தொழுகைக்காக மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறிய கடத்தப்பட்டதாகவும், அருகிலுள்ள வனப்பகுதியில் உள்ள ஒரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அங்கு இருந்த ஒரு குழு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ என்று கூச்சலிட்டவாறு அந்த வயோதிகரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்த புகாரின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *