முஸ்லீம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

Share this News:

மங்களுரு (29 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் மங்களுரு அருகே வியாழன் மாலை முஸ்லிம் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

உயிரிழந்த முஸ்லிம் இளைஞர், மங்களூருவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சூரத்கல் அருகே உள்ள மங்கல்பேட்டையில் வசிக்கும் முகமது ஃபாசில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மங்களூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிரவீன் குமார் நெட்டாருவின் குடும்பத்தை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்துத்துவாவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன, இருப்பினும் கொலைக்கான நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *