நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா?- தூக்கிலிருந்து தப்பிக்க மீண்டும் முயற்சி!

Share this News:

புதுடெல்லி (20 பிப் 2020): நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி தூக்கு தண்டனையை தள்ளிப் போட மீண்டும் முயற்சி செய்துள்ளார்.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் ஷர்மா, தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கில் போடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. தூக்குத் தண்டனை இப்படி தள்ளிப் போவதை நிர்பயாவின் தாய் விரும்பவில்லை.

இந்த நிலையில் மேலும் ஒரு முயற்சியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வினய் ஷர்மா, கடந்த 16ம் தேதியன்று சுவரில் தனது தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.

முழு உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்பதால், தூக்குத் தண்டனையை தள்ளிப்போடவே வினய் ஷர்மா இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *