நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு!

Share this News:

புதுடெல்லி (02 மார்ச் 2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

மார்ச் 3 ஆம் தேதி தூக்க்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது நிலுவையில் இருப்பதால் 3ம் தேதி நால்வரையும் தூக்கிலிட தடை விதிக்குமாறு பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட அடுத்த உத்தரவு வரும் வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தொடர்ந்து மூன்றாவது முறை தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *