பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக்கிங் – புஷ்பம் பிரியா புகார்!

Share this News:

பாட்னா (10 நவ 2020): பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் . இந்நிலையில் பாரதீய ஜனதா தேர்தலை நாசப்படுத்தியதாக புஷ்பம் பிரியா கூறினார். அனைத்து சாவடிகளிலும் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“தனது கட்சிக்கு விழுந்த வாக்குகள் மோசடி செய்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றப்பட்டன, ” என்று புஷ்பம் பிரியா கூறினார். அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் ஈ.வி.எம்-களில் மோசடி செய்ய வாய்ப்பில்லை என்பதாக தெரிவித்துள்ளது.

புஷ்பம் பிரியா போட்டியிட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். பிஷப்பில், புஷ்பம் பிரியா இதுவரை 398 வாக்குகளையும், நோட்டா 1314 வாக்குகளையும் பெற்றுள்ளது . பங்கிப்பூரில், புஷ்பத் 952 வாக்குகளை பெற்றுள்ளார்.

 

 


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *