விவசாயிகள் போராட முழு உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

Supreme court of India Supreme court of India
Share this News:

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது. மேலும் மறு விசாரணையை ஜனவரி வரை ஒத்திவைத்துள்ளது.

மேலும் விவசாய சட்டங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை இப்போது ஆராயப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. விவசாயிகளின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்த அதே நேரத்தில், விவசாயிகளுக்கு போராடும் உரிமை உண்டு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மனு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும் போது மனு மறுபரிசீலனை செய்யப்படும். இதற்கிடையில், மனுதாரர்கள் தேவைப்பட்டால் விடுமுறை பெஞ்சை அணுகலாம் என்று நீதிமன்றம் கூறியது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் வேலைநிறுத்தம் செய்யலாம். ஆனால் மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீற வேண்டாம். விவசாயிகளின் அமைப்புகளுக்கு போராட்ட முறையை எவ்வாறு மாற்றுவது என்று சொல்ல வேண்டும். பேச்சுவார்த்தை மூலம்தான் இலக்கை அடைய முடியும் என்றும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அரசுக்கு ஆதரவாக ஆஜரான அட்டர்னி ஜெனரல், விவசாயிகள் சாலைகளை மறித்து பொதுமக்களுக்கு சிக்கல் அளிப்பதாய் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரினர். இதற்கிடையில், போராட்டம் 22 வது நாளை எட்டியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *