பெங்களூரு (31 டிச 2020): கர்நாடகாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 200 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எஸ்.டி.பி.ஐ இதுவரை 223 இடங்களை வென்றுள்ளது. மங்களூர் மாவட்டத்தில் எஸ்டிபிஐ அதிக இடங்களை கைபற்றியுள்ளது.
மடிகேரி (குடக்) – 10, உத்தரா கன்னடம் – 5, குல்பர்கா – 5, உடுப்பி – 14, பல்லாரி – 2, ஹாசன் – 4 மாவட்டங்கள். சாமராஜநகர், யாத்கீர், ரைச்சூர் மற்றும் மைசூர் கிராமப்புற (ஹுன்சூர்) மாவட்டங்களில் முடிவுகள் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. அதேபோல. பல மாவட்டங்களுக்கான இறுதி புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கர்நாடக மாநிலத்தில், 5,728 கிராம பஞ்சாயத்துகளிலும், 91,339 இடங்களுக்கு 226 தாலுகாக்களிலும் தேர்தல் நடைபெற்றது. இவர்களில் 8,074 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 43,238 இடங்களுக்கு டிசம்பர் 22 அன்று தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது சுற்று தேர்தல் டிசம்பர் 27 அன்று 43,238 இடங்களுக்கு நடைபெற்றது. மொத்தம் 2,22,814 பேர் களத்தில் போட்டியிட்டனர். பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் மதச்சார்பற்ற மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் களத்தில் நின்றன.