ஏமாற்றம்: மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து பங்குச் சந்தை படுவீழ்ச்சி!

Share this News:

மும்பை (01 ஜன 2020): மத்திய பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமான பட்ஜெட் என்பதால் மும்பை பங்கு சந்தை படுவீழ்ச்சி அடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

அவரது அறிவிப்புகளில் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கத்தக்க எவ்வித அம்சங்களும் இடம்பெறவில்லை என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை உயர்வை சந்தித்து, மாலையில் வர்த்தகம் முடிவடைந்தபோது மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது.

‘சென்செக்ஸ்’ 987.96 புள்ளிகள் சரிந்து 39,735.53 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதேபோல் ‘நிப்டி’ 300 புள்ளிகள் சரிந்து 11,662 புள்ளிகளில் நிறைவடைந்தது.

குறிப்பாக, எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 6.3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 6.6 சதவீதம் அளவுக்கும், எச்.எப்.டி.சி. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 3.4 சதவீதம் அளவுக்கும் வீழ்ச்சி அடைந்தன. a


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *