உச்சம் தொடும் கொரோனா – இந்தியாவிற்கு மேலும் அதிர்ச்சி தகவல்!

Share this News:

புதுடெல்லி (18 அக் 2020): இந்தியாவில் வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு நியமித்த குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரசின் தீவிர பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.

இந்த குழுவானது வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன் உச்சம் தொட்டு விட்டது. அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரலாம். பாதுகாப்பு முறைகள் தொடர வேண்டும்.

கொரோனா தொற்று முடிவடையும் காலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும். இதுவரை 75 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *