கேரளாவில் இருவருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பாசிட்டிவ்!

Share this News:

திருவனந்தபுரம் (04 ஏப் 2020): கேரளாவில் இருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை  68-ஆக உயா்ந்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவிலும் அதிக அளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு இருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்விருவரும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள். அதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்தவர். ஒருவர் இந்தியர்.

கொரோனாவின் அறிகுறிகளாக, காய்ச்சல், இருமல், உள்ளிட்டவைகளை கூறினாலும் வெளிநாடுகளில் சிலருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *