நியூயார்க் (23 ஜூன் 2020): வந்தேபாரத் திட்டத்தின்படி வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் ஏர்.இந்தியா விமானம் கட்டணங்கள் வசூலிப்பதை அமெரிக்க போக்குவரத்துதுறை எதிர்த்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரமுடியாமல் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தேபாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானம் மீட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலு பொதுமக்களிடம் டிக்கெட்டுக்கு பணம் வசூலிப்பதையும் அமெரிக்க போக்குவரத்துதுறை எதிர்த்துள்ளது.