தீ விபத்தில் நான்கு உயிர்களை காப்பற்றிவிட்டு உயிரிழந்த உஸ்மா பாத்திமா!

Share this News:

ஐதராபாத் (23 ஆக 2020): தெலுங்கானாவில் ஸ்ரீ சைலம் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு உயிர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார் உஸ்மா பாத்திமா என்ற பொறியாளர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதிலிருந்து, 200 கிலோ மீட்டர் தொலைவில்,ஆந்திர எல்லையை ஒட்டி, கிருஷ்ணா ஆற்றின் மீது, ஸ்ரீசைலம் நீர் மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது.இந்த நீர் மின் நிலையத்தை, தெலுங்கானா மாநில மின் உற்பத்திக் கழகம் நடத்தி வருகிறது.

இங்கு கடந்த 19 ஆம் தேதி இரவு தீப்பிடித்தது. இதையடுத்து, புகை மூட்டம் ஏற்பட்டது. அப்போது, மின் நிலையத்தில், 19 பேர் பணியில் இருந்துள்ளனர்இதில் 9 பேர் பலியாகியுள்ளனர். அதில் ஒருவர் அங்கு பணிபுரிந்த பெண் உதவி பொறியாளர் உஸ்மா பாத்திமா என்பவர்.

இவரது தந்தை முஹம்மது ஜுபைர் காலணி கடை நடத்தி வருகிறார். மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரரும் உஸ்மாவுக்கு உண்டு.

இந்நிலையில் இந்த தீவிபத்தில் உஸ்மா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தீவிபத்தில் உயிர் தப்பிய 10 பேரில் நான்குபேரை உஸ்மா ஃபாத்திமாவே காப்பாற்றியுள்ளார். எனினும் அவரது உயிர் பறிபோய்விட்டது.

ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *