துபாய் – இந்தியா விமான சேவை தொடங்கப்படுமா? – எதிஹாத் ஏர்வேஸ் பதில்!

Share this News:

அபுதாபி (17 ஜூலை 2021): வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து விமான சேவை இல்லை என்று எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் பரவழைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத் தடை ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிட் குறைந்து வருவதால் ஜூலை 21 க்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடை நீடிக்கிறது.

இந்நிலையில் பயணிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம், ஜூலை 21 க்கு பிறகு பயணத் தடை நீக்கப்படும் என்ற இந்தியர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *