ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்!

Share this News:

துபாய் (16 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் 18 வயதுக்குட்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்வது உட்பட பல விதிகளைக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மனிதவள அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் புதிய சட்டத்தை அறிவித்தது.

புதிய சட்டத்தின்படி வீட்டுப் பணியாளர்களை விசா மோசடி மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்கிறது.

தொழிலாளர்களுக்கு நல்ல பணிச்சூழலை வழங்க வேண்டிய கடமை முதலாளிக்கு உள்ளது மற்றும் ஒரு நபரை வீட்டு வேலைக்கு பரிசீலிக்கும்போது, ​​வேலையின் தன்மை, சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் தொழிலாளியின் சுகாதாரச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதுக்குட்பட்டவர்களை பணியில் அமர்த்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *