அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

டெல்லி போலீஸ் இன்றும் அட்டூழியம் – ஜாமியா மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10…

மேலும்...

பயணி என்ன பேசினால் உனக்கென்ன? – ஊபர் (UBER) டிரைவர் மீது அதிரடி நடவடிக்கை!

மும்பை (10 பிப் 2020): ஊபரில் பயணித்த பயணி சிஏஏ குறித்து போனில் பேசிய நிலையில் அவரை போலீசில் ஒப்படைத்ததால், ஊபர் டிரைவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது ஊபர் நிறுவனம். ராஜஸ்தானை சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். இவர் முபையில் ஊபரில் பயணித்தபோது, சிஏஏ குறித்தும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்தும் போனில் அவரது நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். இதனை தனது போனில் பதிவு செய்த ஊபர் டிரைவர் ரோஹித் சிங், அந்த கவிஞரை…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லி ஷஹீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை…

மேலும்...

இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

மும்பை (10 பிப் 2020): முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமம் ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ள இஸ்லாக் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ள இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்த கிராமத்தில். கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு…

மேலும்...

சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது.  விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பெயர்…

மேலும்...

அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு!

கவுஹாத்தி (08 பிப் 2020): அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி. என்பிஆர் உள்ளிட்ட விவகாரங்கள் நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஸ்ஸாமில் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருப்பவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களை விடுவிக்க அஸ்ஸாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி முஸ்லிம்கள் தடுப்பு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் கட்சியிலிருந்து விலகல்!

போபால் (08 பிப் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச பாஜக தலைவர்களில் ஒருவரான உஸ்மான் பட்டேல் கட்சியிலிருந்து விலகியுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லி ஷஹீன் பாக்கில் பெண்கள் கடுங் குளிரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தூரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜ்ரானா வட்டாரத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர். படேல். மேலும்…

மேலும்...

முஸ்லிம்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் – பாஜக எச்சரிக்கை!

புதுடெல்லி (08 பிப் 2020): முஸ்லிம்கள் அவர்களது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் முஸ்லிம் பெண்கள் கையில் வாக்காளர் அட்டையுடன் நிற்கும் வீடியோவை பதிவிட்டு, ‘நீங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் இது மீண்டும் தேவைப்படும்’ என்பதாக வெறுப்பூட்டும் பதிவை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. நாடெங்கும் சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்…

மேலும்...

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி – இன்றும் ஒரு துப்பாக்கிச் சூடு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக், ஜாமியா பல்கலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லி ஜாஃப்ராபாத் துணிக் கடை ஒன்றின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்து வந்த அவர்கள்,  தொடர்ந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்….

மேலும்...