ஊரடங்கு காலத்தில் பெண் போலீசை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது!

சென்னை (08 ஜூன் 2021): ஊரடங்கு காலத்தில் பெண் போலீசை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் அக்சர் அலி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாததால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை பாரிமுனையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது.. ஆட்டோவை அக்சர் அலி என்பவர் ஓட்டி வந்தார்.. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மாற்றுத்திறனாளி என்பதும், மருத்துவ…

மேலும்...

இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி போடுபவர்களுக்கு சவூதி வர அனுமதி!

ரியாத் (07 ஜூன் 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடுபவர்கள் சவுதி வரும்போது தனிமைப்படுத்தல் விலக்கு அளிக்க சவூதி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சவூதி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் விநியோகிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றது. தடுப்பூசி போடுவதற்காக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் முகீம் போர்ட்டலில் தடுப்பூசி குறித்த தகவல்களை வழங்க வேண்டும்….

மேலும்...

சிறந்த கொரோனா தடுப்பூசி எது? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (07 ஜூன் 2021): இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்களப் பணியாளர்கள் உள்பட பலகோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பு அளிப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. பெரிய அளவில், தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறது. தடுப்பூசிகளின்…

மேலும்...

ஹஜ் யாத்திரை குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கம்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய சிறுபான்மை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியா கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை தடை செய்தது. இந்த ஆண்டும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய வகை கொரோனா குறித்து கவலைகள் எழுப்பப்படுவதாலும் இந்த முறை…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதித்தவர்கள் நிலை – மருத்துவ நிபுணர்கள் முக்கிய தகவல்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் மரணம் ஏற்படுகின்றதா? என்பது குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதன்படி, இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும்…

மேலும்...

ரெயிலில் திருச்சி வந்த ஆக்சிஜன் – மூன்றாம் அலையையும் சமாளிப்போம்: அமைச்சர் கே.என். நேரு!

திருச்சி (05 ஜூன் 2021); சிக்ஜில் என்ற நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள 80 டன் ஆக்சிஜன், இன்று (05.06.2021) ரயில் மூலம் திருச்சி வந்து சேர்ந்தது. இதில் 16 டன் தாங்கக்கூடிய லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதனைப் பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை. இருப்பினும் கையிருப்பு வைத்துக்கொள்வதற்காக இவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலை வந்தாலும் அதை…

மேலும்...

தமிழ் நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-வரை நீட்டிப்பு!

சென்னை (05 ஜூன் 2021): தமிழ் நாட்டில் தளர்வுகளுடனான லாக்டவுன் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு சரிந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது . ஜூன் 7 முதல் மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. ஜூன் 14 வரை அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள்…

மேலும்...

பாகிஸ்தான் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி!

இஸ்லாமாபாத் (02 மே 2021): பாகிஸ்தானில் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு பாக்வாக் என் பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிநேற்று (01.06.2021) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா பயணத் தடை மேலும் நீட்டிப்பு!

துபாய் (30 மே 2021): இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்காண பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது . இது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம் தனது…

மேலும்...

ஆற்றில் வீசப்பட்ட கொரோனவால் உயிரிழந்த உடல்!

லக்னோ (30 மே 2021): உத்திர பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் ஆற்றில் வீசப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவில் பாதுகாப்பு உடை அணிந்த இரண்டு ஆண்கள், ராப்தி ஆற்றில் இறந்த உடனை வீசுவது தெளிவாக உள்ளது அந்த உடல் கொரோனாவால் உயிரிழந்தவருடையது என்பதை பால்ராம்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உத்திர பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான உடல்கள் கங்கையில்…

மேலும்...