இந்திய இங்கிலாந்து விமான சேவை ரத்து!

புதுடெல்லி (21 டிச 2020): இந்திய இங்கிலாந்து விமான சேவையை ரத்து செய்வதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை…

மேலும்...

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் – சவூதி அரேபியாவின் அனைத்து விமானங்களும் ரத்து!

ரியாத் (21 டிச 2020): பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து சவூதி அரேபியா அனைத்து சர்வதேச வர்த்தக விமானங்களையும் ஒரு வாரம் நிறுத்தியுள்ளது இந்த தகவலை சவூதி உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி சவுதி பத்திரிகை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியில் வசிக்கும் மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சேவை ரத்து இருக்கும்…

மேலும்...

ஒமானில் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் முறை ரத்து!

மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது. இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை…

மேலும்...

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (14 டிச 2020): சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. விடுதிகளில் வசிக்கும் 774 மாணவர்களில் இதுவரை 408 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி 10 சதவீத விடுதி மாணவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

அம்பாலா (09 டிச 2020): கொரோனா தடுப்பூசி சோதனைக்காக தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்…

மேலும்...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரிக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 டிச 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது வரை தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல், பொதுமக்கள் மட்டுமில்லாது, அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களையும் பாதித்துவருகிறது. இந்தியாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட பலரையும் கொரோனா வைரஸ் பாதித்தது. தமிழகத்தைப்…

மேலும்...

ஒரு ஹேப்பி நியூஸ் – உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்க அனுமதி!

லண்டன் (02 டிச 2020): பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. லண்டன்: பிரிட்டனில்…

மேலும்...

பாஜக எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மரணம்!

ஜெய்ப்பூர் (30 நவ 2020): கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ராஜஸ்தான் மாநில பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஈ கிரண் மகேஸ்வரி (வயது 59). இவர் கடந்த வாரம், இவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்….

மேலும்...

கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை (30 நவ 2020): தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, தமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு . மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம்…

மேலும்...

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து – 5 நோயாளிகள் பலி!

ராஜ்கோட் (27 நவ 2020): குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5பேர் பரிதாபாமாக உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்…

மேலும்...