சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று!

ஐதராபாத் (09 நவ 2020): பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாமர மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், பல்வேறு திரைபிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு கொரோனா இருப்பது…

மேலும்...

சாதாரண மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலகுவாக கிடைக்காது – எய்ம்ஸ் இயக்குனர் கருத்து!

புதுடெல்லி (08 நவ 2020): இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், 2022ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என்று தேசிய கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர் குழுவில் உறுப்பினரும், எய்ம்ஸ் இயக்குனருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என்றும், தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸ்…

மேலும்...

கேரள ஆளுநருக்கு கொரோனா தொற்று!

திருவனந்தபுரம் (07 நவ 2020): கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த…

மேலும்...

குவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்!

குவைத் (30 அக் 2020): குவைத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் வீட்டு தனிமைப் படுத்தல் கால அவகாசம் 14 நாட்கள் என்பது தொடர்ந்து கடை பிடிக்கப்படும் என்று குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மஸ்ராம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கோவிட் தடுப்பூசி விநியோகிப்பதற்கான பிரச்சாரத்தை சுகாதார அமைச்சர் டாக்டர். பாசலில் தெரிவிக்கையில் கோவிட் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை வழங்குவதில் முதியவர்கள்,…

மேலும்...

மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (27 அக் 2020): மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிப்புகள் தீவிரமாக இல்லாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பம்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…

மேலும்...

நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (24 அக் 2020): சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் முதல் விதிக்கப்பட்ட தற்காலிக பயணத் தடையில் இருந்து சில வகை விலக்கு அளிக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு!

துபாய் (22 அக் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை ,578 புதிய கொரோனா வைரஸ்கள் வழக்குக்கள்பதிவாகியுள்ளன. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 474 ஆனது. . ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 114,483 சோதனைகளை நடத்தியது, இதில் 1,578 புதிய கோவிட வழக்குகளைக் கண்டறிய வழிவகுத்தது. 1,150 பேர் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த…

மேலும்...

தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கோவிட் 19 தடுப்புஊசி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

புதுக்கோட்டை (22 அக் 2020): கொரோனா தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது. சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஸ்டாலின் அரசைப்பற்றி குறை கூறுகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி…

மேலும்...

தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது – லண்டன் நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

லண்டன் (22 அக் 2020): தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 4 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சத்தினை தாண்டியது. தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில்…

மேலும்...

குறைந்து வரும் கொரோனா – தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல்!

சென்னை (21 அக் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 857 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,91,754 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 263 பேருக்கு கொரோனா…

மேலும்...