டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!
புதுடெல்லி (08 ஜூன் 2020): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளர். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அதன்பிறகு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவர் எந்தக் கூட்டத்திலும்…
