தமிழகத்தில் நீட் தேர்வு எப்போது நடத்தலாம்? – முதல்வர் தகவல்!

சென்னை (27 ஆக 2020): கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதபோதும்…

மேலும்...

மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (27 ஆக 2020): மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து…

மேலும்...

வீணில் தகரம் அடித்து அடைத்தவர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சென்னை (27 ஆக 2020): கொரோனாவிலிருந்து மீண்டவர் வீட்டில் தகரம் வைத்து அடைத்த அதிகாரிகளுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுபியுள்ளது. சென்னையை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிப்பில் வசிக்‍கும் 50 வயது நபருக்‍கு கடந்த 14 நாட்கள் முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந் நிலையில் பல்லாவரம் நகராட்சி ஊழியர்கள், அவரது வீட்டின் கதவு…

மேலும்...

கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் ரத்து – முதல்வர் அதிரடிஉத்தரவு!

சென்னை (26 ஆக 2020): கல்லூரிகளில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸானதாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை…

மேலும்...

ஏற்கனவே கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

ஹாங்காங் (25 ஆக 2020): கொரோனா வைரஸ் பாதித்தவருக்கு மீண்டும் அதே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஸ்பெயினுக்கு சென்று ஹாங்காங்கிற்குத் திரும்பிய 33 வயதான ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஏற்கனவே மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாகவும அவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது லேசான அறிகுறிகள் இருந்தன, இரண்டாவது முறையாக தாக்கியபோது எந்த அறிகுறியும் இல்லை; ஹாங்காங் விமான…

மேலும்...

வரும் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் இயங்க வாய்ப்பு!

புதுடெல்லி (25 ஆக 2020): வரும் 1 ஆம் தேதி முதல் நாடெங்கும் மெட்ரோ ரெயில்கள் இயங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை கருதி, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கின் மூன்றாம் கட்ட தளர்வுகள், வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளன. இந்நிலையில், அன்லாக் 4…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

சென்னை (24 ஆக 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பிபி சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் “மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் எஸ்.பி.பி. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” இவ்வாறு எஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் எஸ்பிபியின் உடல் நிலை மிகவும்…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் மீது வீண்பழி – அரசு மற்றும் ஊடகங்கள் மீது மும்பை நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (23 ஆக 2020): கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அரசு பலிகடா ஆக்கியுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் மார்கஸ் தப்லீக்கில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தனர். டெல்லியில் மார்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு…

மேலும்...

சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!

சென்னை (20 ஆக 2020): சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ரஹ்மான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஹ்மான்கான் திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான்கான் மறைவையொட்டி திமுக…

மேலும்...

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு (19 ஆக 2020): கொரோனா முழுவதும் இல்லாமல் போன பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு…

மேலும்...