அரசு அதிகாரிகளின் மெத்தனம் – வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த பயணி பரிதாப மரணம்!

சென்னை (15 ஜூன் 2020):அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில்…

மேலும்...

அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? – குமுறும் தமிழர்கள்!

சென்னை (15 ஜூன் 2020): அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மெத்தனம் காட்டி வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகமெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது….

மேலும்...

தமிழகத்தில் 45 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகள்!

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23…

மேலும்...

பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்க்க தடை!

சென்னை (14 ஜூன் 2020): அனுமதி பெறாமல் 11-ம் வகுப்பில் புதிய பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலையில் பல்வேறு கோரிக்கைகளை அடுத்து தேர்வை ரத்து செய்து 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. இந்நிலையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாணவர் பெற்றோரிடம் இது…

மேலும்...

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

புதுடெல்லி (14 ஜூன் 2020): இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்கியிருந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது, விசா நடைமுறையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது தனிமைப்படுத்தல் காலங்களும் முடிவடைந்தன. இந்நிலையில் வெளிநாட்டு ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு…

மேலும்...

கொரோனா வார்டில் மலர்ந்த காதல் – ஆத்திரம் அடைந்த மருத்துவர்கள்!

சென்னை (14 ஜூன் 2020): “நாங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் உங்களுக்கு இப்போது காதல் கேட்குதா?” என கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கோபம் அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு ஒரு இளைஞரும் ஒரு இளம் பெண்ணும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே காதலும் ஒரு பக்கம்…

மேலும்...

கொடூரத்தின் உச்சத்தை தொட்ட அரசு அதிகாரிகள் – உ.பி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

லக்னோ (14 ஜூன் 2020): உயிரிழந்த சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றும் சம்பவம் தொடர்பாக உபி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம், பல்ராம்பூர் மாவட்டம் உத்ராவுலா நகரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் முன் 42 வயதுடைய ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு கொரோனா வந்திருக்குமோ என அஞ்சி அவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் குப்பைபோடு குப்பையாக நகராட்சி ஊழியர்கள் 4 பேர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் 3…

மேலும்...

கலெக்டரிடம் கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்!

மதுரை (13 ஜூன் 2020): கொரோனா நிதியாக மதுரை கலெக்டரிடம் ரூ 30 ஆயிரம் வழங்கியுள்ளார் பிச்சைக்காரர் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் ஊரு ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது பூர்வீகம் தூத்துக்குடி, மும்பையில் இருந்த இவர் மனைவி இறந்ததும் தமிழகம் வந்து பிச்சை எடுத்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக மதுரையில் முகாமிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் இவரால் வெளியூர் செல்ல முடியவில்லை. மதுரை…

மேலும்...

அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

புதுடெல்லி (13 ஜூன் 2020): அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர்…

மேலும்...

தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி – மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு – ஸ்டாலின் ட்வீட்!

சென்னை (13 ஜூன் 2020): தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #CoronaVirus…

மேலும்...