காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று!

புதுடெல்லி (16 அக் 2020): காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா தொற்று முக்கிய தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,.இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தனிமைப்படுத்தி உள்ளேன். என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும்...

கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு!

மாஸ்கோ (15 அக் 2020): கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். ’ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில்…

மேலும்...

இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு!

லண்டன் (14 அக் 2020): இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மூன்றடுக்கு ஊரடங்கிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்தின் வடக்கில் கொரோனா தொற்று பரவல் மிகவேகமாக பரவி வருகின்றது. வரவிருக்கும் வாரங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த மாத தொடக்கத்திலிருந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகின்றது என்றும், துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளையவர்களிடையே வைரஸ் விரைவாக…

மேலும்...

கேரளாவை நினைத்தால்தான் கவலையாக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (11 அக் 2020): கேரளாவில் கொரோனா அதி வேகத்தில் பரவி வருவது தமிழகத்திற்கு ஆபத்து என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவை சிறப்பாக கையாண்டு பாராட்டு பெற்ற கேரளாவில், இப்போது தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து…

மேலும்...

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு!

சென்னை (10 அக் 2020): கொரோனா பரவல் சென்னையில் மீண்டும் அதிக அளவில் உள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தளர்வுகளை அளித்துள்ளது தமிழக அரசு. கொரோனா பரவல் நூற்றுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருந்த போது நாம் முழு பொதுமுடக்கத்தில் இருந்தோம். தற்போது அனுதினமும் ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. இந்த சமயம் தளர்வுகளோடு இருக்கிறோம். எனில், நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பாக நடந்து…

மேலும்...

ஹேப்பி மூடில் தேமுதிகவினர் – காரணம் இதுதான்!

சென்னை (08 அக் 2020): தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனராம். அண்மையில் கரோனா காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக, நேற்று அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாகவும், அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல்…

மேலும்...

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா பாதிப்பால் காலமானார்!

சென்னை (30 செப் 2020):இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (94) கொரோனா பாதிப்பால் காலமானார். ராமகோபாலனுக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை…

மேலும்...

அச்சுறுத்தும் கொரோனா – கேரளாவில் மருத்துவ அவசர நிலைக்கு கோரிக்கை

திருவனந்தபுரம் (29 செப் 2020): கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தின்தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆரம்ப கட்டத்திலிருந்தே கொரனோ தடுப்பு நடவடிக்‍கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு, பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைவாகவே வைத்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, கேரளாவில் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மூன்று இலக்கங்களில் இருந்த பாதிப்பு,…

மேலும்...

விஜயகாந்த் மனைவி பிரேமலதா மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (28 செப் 2020): விஜயகாந் மனைவி பிரேமலதா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளார் விஜயகாந்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், பூரண உடல்நலத்துடன் உள்ள விஜயகாந்த், இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளார். அடுத்த வாரத்தில் இருந்து…

மேலும்...

திமுக முக்கிய புள்ளிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!

சென்னை (28 செப் 2020): திமுக எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று…

மேலும்...