கொரோனா வார்டில் மலர்ந்த காதல் – ஆத்திரம் அடைந்த மருத்துவர்கள்!

சென்னை (14 ஜூன் 2020): “நாங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் உங்களுக்கு இப்போது காதல் கேட்குதா?” என கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கோபம் அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு ஒரு இளைஞரும் ஒரு இளம் பெண்ணும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே காதலும் ஒரு பக்கம்…

மேலும்...

கொடூரத்தின் உச்சத்தை தொட்ட அரசு அதிகாரிகள் – உ.பி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

லக்னோ (14 ஜூன் 2020): உயிரிழந்த சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றும் சம்பவம் தொடர்பாக உபி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம், பல்ராம்பூர் மாவட்டம் உத்ராவுலா நகரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் முன் 42 வயதுடைய ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு கொரோனா வந்திருக்குமோ என அஞ்சி அவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் குப்பைபோடு குப்பையாக நகராட்சி ஊழியர்கள் 4 பேர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் 3…

மேலும்...

கலெக்டரிடம் கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்!

மதுரை (13 ஜூன் 2020): கொரோனா நிதியாக மதுரை கலெக்டரிடம் ரூ 30 ஆயிரம் வழங்கியுள்ளார் பிச்சைக்காரர் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் ஊரு ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது பூர்வீகம் தூத்துக்குடி, மும்பையில் இருந்த இவர் மனைவி இறந்ததும் தமிழகம் வந்து பிச்சை எடுத்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக மதுரையில் முகாமிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் இவரால் வெளியூர் செல்ல முடியவில்லை. மதுரை…

மேலும்...

அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

புதுடெல்லி (13 ஜூன் 2020): அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர்…

மேலும்...

தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி – மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு – ஸ்டாலின் ட்வீட்!

சென்னை (13 ஜூன் 2020): தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #CoronaVirus…

மேலும்...

பாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்!

இஸ்லாமாபாத் (13 ஜூன் 2020): பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி உட்பட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அஃப்ரிடி அவரது ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என் உடலில் வலி அதிகரிப்பதை உணர்ந்தேன். நான் பரிசோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்வசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை தேவை“ என்று பதிவிட்டுள்ளார். I’ve been feeling unwell since…

மேலும்...

மகாராஷ்டிராவைவிட தமிழகம்தான் சூப்பர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சென்னை (13 ஜூன் 2020): கொரோனா பரிசோதனை மகாராஷ்டிராவை விட தமிழகத்தில்தான் அதிகம் செய்யப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 2,000 செவிலியர்கள் இன்று பணி நியமனம் செய்யபட்டனர். புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர்களை வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2 ஆயிரம் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது….

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 11,458 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (13 ஜூன் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (12 ஜூன் 2020): சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு…

மேலும்...

முகக்கவசம் இல்லை, சமூக இடைவெளி இல்லை – ஆயிரக்கணக்கானோர் புடைசூழ நடந்த அமைச்சர் வீட்டு திருமணம்!

கோவை (12 ஜூன் 2020): கொரோனா விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமணம் அமர்க்களமாக அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன் ஆகியோருக்கு, கோலார்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. கொரோனா விதிமுறைகளைப் பற்றி கவலைப் படாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். அரசுத்துறை அதிகாரிகள்,…

மேலும்...