இந்தியாவில் ஒரே நாளில் 11,458 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (13 ஜூன் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

மேலும்...

கொரோனா வைரஸ் – இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்தியா கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை சந்தித்து வருகிறது….

மேலும்...

ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் கைது!

புதுடெல்லி (09 ஜூன் 2020): ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது மேலும் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து இயங்கும்…

மேலும்...

இந்திய சீன ராணுவங்கள் எல்லையின் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கியது!

லடாக் (09 ஜூன் 2020): இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக, இதற்க்கு முன்னே இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை “மால்டோ” என்ற இடத்தில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று இருநாட்டு…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு செவ்வாய்க்கிழமை நிலவரம்!

புதுடெல்லி (09 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடந்து அதிகரித்தவண்ணமே உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் 9,987 அதிகரித்து 2,66,598 ஐ எட்டியுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 266 அதிகரித்து 7,466 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார விவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் விஸ்வரூப உயர்வு!

புதுடெல்லி (08 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 7,135 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திங்கள்கிழமை காலை முடிவடைந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப்…

மேலும்...

கொரோனா மோசமாக பாதித்த உலகின் ஐந்தாவது நாடானது இந்தியா!

புதுடெல்லி (07 ஜூன் 2020): இந்தியா கொரோனா மோசமாக பாதித்த ஐந்தாவது நாடாக மாறியுள்ளது. கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது 2,46,628 நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளுடன், ஐந்தாவது மோசமான நாடாக மாறியுள்ளது, இதன் மூலம் ஸ்பெயினின் எண்ணிக்கையை முந்தியுள்ளது. சமீபத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆக உள்ளது. எவ்வாறாயினும், உணவகங்கள், வணிக…

மேலும்...

லடாக் எல்லை பிரச்சனை குறித்து இந்தியா சீனா முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

புதுடெல்லி (06 ஜூன் 2020): லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. லடாக்கின் எல்லை பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீன ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. இதில் 150 வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பிரச்னை தொடங்கிய இடமான பாங்காங் டிசோ ஏரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரி குன்சா…

மேலும்...

இந்தியாவில் அமைதி காக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் – காரணம் ஏன்?

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 8 நாட்களாக ஒரு ஊடக சந்திப்பைக் கூட நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கோவிட் 19 பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது அதேவேளைல் இந்தியாவில் கோவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என்றாலும், உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா ஒரு வளர்ந்து வரும் கோவிட் -19…

மேலும்...

உலக நன்மைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதிகளையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என்றார். மேலும், ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவு மிகவும்…

மேலும்...