‘மௌனத்தின் பாடல்’ – கவிதை நூல் விமர்சனம்!

இதயமெல்லாம் இனிக்கும் இளம்கவிஞர் இப்னு ஹம்தூனின் மானுடம் பாடும் ‘மௌனத்தின் பாடல்’ பற்றிய விமர்சனம். இரத்தினச் சுருக்கமான இலக்கிய வடிவம் கவிதை. சங்ககாலம் முதல் சமகாலம் வரை உள்ள கவிதைகளில் இன்றைய கவிதைகள் உணர்ச்சியிலும் உள்ளடக்கத்திலும் புதியதொரு உருமாற்றம் பெற்றுள்ளன. கவித்திறனும் கருத்தாழமும் மிக்க கவிதைகள் மனித நேயம் – மானுட மகிழ்ச்சி – மக்கள் சுதந்திரம் – மனித எழுச்சி என்கிற மனிதமேம்பாட்டால் தமிழுக்கும் வாழ்வுக்கும் புது முகம் தந்துள்ளன. சமகால அழுக்கை – சமூக…

மேலும்...

மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது. அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில்…

மேலும்...

பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்…!

அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகள் பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம் மானந்தான் முதன்மையென்று மண்ணில் நாட்டி ….மகத்தான விடுதலையின் மாட்சி கண்டோம் ஆனந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோம் ….அதற்கான விலைதந்தோம்; மறந்து நின்றோம் வீணிந்த சுதந்திரமோ வினவக் கேட்போர் ….விடையாக ஆனபடி போகும் வாழ்வில் ஏனிந்த இழிநிலைகள் எண்ணிப் பார்த்து ….எழுதிவிட்டேன் கவிதையிலே கேட்டுப் பாரீர். அடிமையராய் வாழ்ந்தபோதில் அடக்கு முறைகள் ….அன்றாடத் துயரோடு மிகுந்த இன்னல் துடிதுடித்தோம் துயர்நீங்கிச் சிறக டிக்க ….தூய்மையான தன்னாட்சி…

மேலும்...

ஸ்விஸ் வங்கியும் சில்லறைப் பொய்களும்!

கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்து விரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் ஊறு விளைவிக்கும் விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன.

மேலும்...
ரமளான் பிறை காண பொதுமக்களுக்கு அழைப்பு!

இந்தியா – இடைவெளிகளின் தேசம்!

உலகின் மிகப்பெரிய நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியாக அந்தச் சேரிப்பகுதி. மும்பையின் ரஃபீக்நகர் தான் அது. மூங்கில் எலும்புகளில் தார்ப்பாய்களை தோலாகப் போர்த்தியிருக்கும் அந்தக் குடியிருப்புகளில் தெளிந்த குடிநீர் கூட கிடைப்பதில்லை. குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய நீலநிற உருளை வடிவக் கலையங்களில் கலங்கலான பழுப்புநிற நீர், புழுக்கள் மிதக்கக் கிடைக்கிறது. சங்கிலியிடப்பட்டு ஒரு குவளையும் உண்டு. திட்டமின்மையையும் ஒழுங்கின்மையையும் பறை சாற்றியபடி தலைக்குமேல் செல்லும் சட்ட விரோத மின்னிழைகள் வழியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது மின்சாரம். இதனினும்…

மேலும்...