இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிர வைக்கும்வகையில் அதிகரிப்பு!

புதுடெல்லி (05 ஜூலை 2020): இந்தியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 24,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. இந்நிலையில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,268 ஆக…

மேலும்...

கொரோனா பாதிப்பால் சென்னைக்கு நிகரான மதுரை!

சென்னை (04 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளன. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனாவால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, சென்னை உள்ளிட்ட தலைநகரங்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடீயாக மதுரை அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா பாதிப்பு துவங்கி 100 நாளை கடந்துவிட்டது. ஆனால் மதுரையில் வைரஸின் பரவல் வேகம் ஜூன் பாதியில் தான்…

மேலும்...

மும்பைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

மும்பை (04 ஜூலை 2020): கொரொனாவால் மகாராஷ்டிர பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வானிலை மைய்யம் அறிவிப்பால் பீதியில் உள்ளனர் மும்பை மக்கள். மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் புரண்டு ஓடியது. இதனால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதில் தாதர், மாட்டுங்கா, வோர்லி, லால்பாக், கிங் சர்கிள், சியன், குர்லா, அந்தேரி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால் அந்தேரி சுரங்க பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை…

மேலும்...

குப்பை கொட்டுவதுபோல் வீசப்படும் கொரோனா சடலங்கள்!

பெங்களூரு (01 ஜூலை 2020): உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மத்திய சுகாதாரத்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் எனும் எச்சரிக்கை இருப்பினும், எதனையும் கவனத்தில் கொள்ளாமல், பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உடல்களை ஒரே குழியில், ஏதோ குப்பைய் கொட்டுவது போல் சுகாதாரத்துறையினர் வீசும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில்…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று – 60 பேர் உயிரிழப்பு!

சென்னை (30 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்பட 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...

நவம்பர் மாதம் வரை இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் – பிரதமர் உரை!

புதுடெல்லி (30 ஜூன் 2020): 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மாலை 4 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “அன் லாக் 2.0 தொடங்கி விட்டது. பொது முடக்கத்தில் தளர்வுகள் அளித்தாலும் முன்பை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு தவறுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். கரோனா காரணமாக பொது முடக்க தளர்வுகளால் பலர் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சுற்றுகிறார்கள். இது மிகப்பெரிய தவறான முன்…

மேலும்...

மணமகன் மரணம் – திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று!

பாட்னா (30 ஜூன் 2020): பீகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு…

மேலும்...

கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் காயல் பட்டினம் முஸ்லிம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

தூத்துக்குடி (29 ஜூன் 2020): சாத்தான்குளம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் போலீசாரின் அடக்குமுறையால் அடுத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக, ஹபீப் முஹம்மது என்ற முஸ்லிம் இளைஞர் முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். அதன் காரணமாக ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆறுமுகநேரி போலிஸார் அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் படுகாயம்…

மேலும்...

ஊரடங்கு நீட்டிப்பா – மருத்துவக் குழு முதல்வரிடம் சொன்னது என்ன?

சென்னை (29 ஜூன் 2020): ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தில், சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல; அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30…

மேலும்...

சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு!

சென்னை (29 ஜுன் 2020): சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதியானால் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ” பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று…

மேலும்...