காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

Share this News:

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர்.

ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் அதிமுகவுக்கு மாறினர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அக்கட்சியில் இருந்து பலர் மொத்தமாக ராஜினாமா செய்திருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் 100 பெண்கள் கட்சியில் இருந்து வெளியேறினர். அதிமுக முன்னாள் அமைச்சர் சின்னையா, அதிமுக மாவட்டச் செயலர் சிட்லபாக்கம் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.

“பாஜக தலைமை மற்றும் கட்சிக்காக உழைக்கும் பெண்களுக்கு மரியாதை இல்லாததால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். பாஜக எங்களிடம் எல்லா மட்டத்திலும் தவறாக நடந்து கொண்டது. அது எங்களை கட்சியில் இருந்து விலகச் செய்தது” என்று கங்காதேவி சங்கர் ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கங்காதேவி சங்கர் மேலும் கூறியதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், மண்டல மற்றும் மாவட்ட மோதல்கள் குறித்து பேசினாலும், அவர் அவர்களின் குறைகளை கேட்க மறுத்துவிட்டார். அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டிருந்தால் கட்சியை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள் என்றும் கங்காதேவி சங்கர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், பா.ஜ.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வுக்கு மாறியவர்கள் அனைவரும், அண்ணாமலை தலைமைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

மாநில ஐடி துறை தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், ஐடி துறை செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் விஜய் ஆகியோர் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய தலைவர்கள் ஆவர்.


Share this News:

One thought on “காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *