ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

Share this News:

சென்னை (28 ஜன 2020): நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினி சரியாக வருமான வரி கட்டவில்லை என கடந்த 2014 ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் 50லட்சத்துக்கும் குறைவான அபராதங்களில் வழக்கு தொடரக்கூடாது என்ற வரம்பை ஒரு கோடியாக உயர்த்தி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் முடிவெடுத்துள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *