திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – அன்பழகன் அதிரடி நடவடிக்கை!

Share this News:

சென்னை (04 பிப் 2020): திமுகவின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாள அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் நியமிக்கப்படுகிறார். தேர்தல் பணிக் குழுச் செயலாளராக இருந்த டி.எம். செல்வகணபதி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

மாவட்டப் பொறுப்பில் விடுவிக்கப்பட்ட வீரபாண்டி ராஜா திமுகவின் தேர்தல் பணிக் குழு செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கே.ஆர்.என். ராஜேஷ்குமார் நியமிக்கப்படுகிறார்.

உள்ளாட்சித் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *