யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து!

Share this News:

மதுரை (14 டிச 2021): யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பிபின் ராவத் மரண விவகாரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம் காவல்துறையினரிடம் அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு 23 ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர்மீது வழக்கு பதிந்தது செல்லாது என உயர்நீதிமன்றக் கிளை தற்போது தெரிவித்ததோடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *