எம்ஜிஆர் சிலையில் காவி நிறம் – சப்பை கட்டு கட்டும் அதிமுக நிர்வாகி!

Share this News:

திருவண்ணாமலை (19 பிப் 2020): திருவண்ணாமலை அருகே எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கபட்டுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலிகுப்பம் கிராமத்தில் எம்ஜிஆர் சிலை ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக அதில் வெள்ளை சாயம் அடிக்கப்பட்டிருந்த நிலையில், எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு, எம்ஜிஆர் சிலையை அதிமுக நகர செயலாளர் ஓசி முருகன் தலைமையில் தூய்மைப்படுத்தி காவி நிறத்தில் சட்டை அணிவிக்கப்பட்டு பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த இரண்டு மாத காலமாக இந்த கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை காவி நிறத்தில் காணப் பட்டது. இவ்விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுகுறித்து நகரச் செயலாளர் ஓசி முருகனிடம் தெரிவிக்கையில் ‘நாங்கள் ஆரஞ்சு நிறத்தில்தான் சிலையில் சட்டையின் நிறத்தை மாற்றினோம். இது எங்களுக்கு காவியாக தெரியவில்லை. இப்படி மாற்றப்பட்டிருப்பதால் இப்பகுதியில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை’ என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *