பாஜக ஐடி பிரிவு நிர்மல் குமாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நோட்டீஸ்!

Share this News:

சென்னை (28 அக் 2022): யூடூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் தகவல் தெரிவித்ததாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கோரி செந்தில் பாலாஜி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பரப்பும் வகையில் நிர்மல் குமார் பேசி இருந்தார். அதில் டாஸ்மாக் கொள்முதலில் ஊழல் நடைபெற்று உள்ளது. இதன் மூலம் அமைச்சர் பணம் பெற்றுள்ளார் . அமைச்சர் இந்த ஊழல் காரணமாக ஆதாயம் அடைந்து உள்ளார் என்று கூறினார். ஆதாரங்களை சமர்பிக்காமல் நிர்மல் குமார் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இதை அவர் ட்விட்டாகவும் போட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக பாஜக ஐடி பிரிவு நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆதாரம் இன்றி எனக்கு எதிராக அவதூறு பரப்பி உள்ளார். அவர் பொய் சொல்கிறார். இதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

பாஜகவுக்கும் செந்தில்பாலாஜிக்கும் சமீபத்தில் தனி விவாதங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *