கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பேஸ்புக் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்!

Share this News:

புதுடெல்லி (14 ஆக 2021): கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட 300 க்கும் அதிகமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனெகா மற்றும் ஃபைசருக்கு எதிராகவும், அவை மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்று கூறி பேஸ்புக்குகளில் சிலர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஒரு குழு செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கியமாக இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் விதமாக இந்த பிரச்சாரம் அமைந்துள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் 2020 இல் ரஷ்ய குழு திட்டமிட்ட போலி பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஆரம்பத்தில், பிரச்சாரம் மீம்ஸ், ட்ரோல்கள் மற்றும் கருத்துகளைப் பயன்படுத்தியது. பின்னர், ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு, குழு கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் பதிவுகளுடன் மீண்டும் செயலில் இறங்கியது. இத்னை அடுத்து பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்கள் காணப்படுகின்றன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *