ஹபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பாக். நீதிமன்றம் தீர்ப்பு!

Share this News:

லாகூர் (12 பிப் 2020): பயங்கரவாதத்திற்கு துணை போனதாக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு இந்த சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்ததுடன் போதிய ஆதாரம் இல்லை என்றும் கூறியது.

ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்காக 23 வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *