மாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்!

Share this News:

லக்னோ (28 அக் 2020): மாடுகளை வெட்டுவோர் சிறை செல்வதில் எந்தவித மாற்றமுமில்லை என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உபியில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் ஒரு பகுதியாக பிரச்சார பேரணியில் கலந்து கொண்டபோது யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக பசுவதை சட்டம் தொடர்பாக கைது செய்யப்பட ரஹீமுத்தின் வழக்கின் விசாரணையில் பசு வதை சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாக பயப்படுத்தப் படுவதாக அலகாபாத் நீதிமன்றம் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *