இந்தியா ஆப்கான் உறவை தொடர தாலிபான் விருப்பம் !

Share this News:

காபூல்(30 ஆக 2021): இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் உறவை தொடர விரும்புவதாக தாலிபான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாய் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “”இந்த துணைக் கண்டத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது.

கடந்த காலங்களைப் போலவே, இந்தியாவுடனான எங்களது கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர விரும்புகிறோம்.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுடன் செய்யப்படும் வர்த்தகம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. விமான வழித்தடத்தின் மூலமாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான வழிகளும் திறந்தே உள்ளன. இந்தியாவுடனான எங்கள் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *