100 வது நாளை எட்டியுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை!

Share this News:

ஜெய்பூர் (16 டிச 2022): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது.

இன்று ராஜஸ்தானில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ரா பயணத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்போம் என்ற முழக்கத்தை ராகுல் காந்தியின் நடைப்பயணம் எழுப்பி வருகிறது. ஏழு மாநிலங்களுக்குப் பிறகு, எட்டாவது மாநிலமான ராஜஸ்தானில் யாத்திரை பயணம் தொடர்கிறது.

2798 கி.மீ. தூரம் கொன்ட இந்த பயணம் ஜனவரி 26ம் தேதி ஸ்ரீநகரில் பயணம் முடிவடைகிறது.

செப்டம்பர் 7 ஆம் தேதி, ராகுல் காந்தி தனது ஜோடோ யாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் ஒப்படைத்தார். பயணத்திற்கு எதிர்பார்த்ததை விட ஆதரவு கிடைத்தது.

இந்த பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கலை, கலாசாரம், பொருளாதாரம், சமூகம் என பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பாதயாத்திரைக்கு அணிவகுத்து நிற்கின்றனர்.

பாரத் ஜோடோ யாத்ரா என்பது 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் ஆயத்தமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *