தொலைதூர வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிமுகம்!

ECI ECI
Share this News:

புதுடெல்லி (29 டிச 2022): தொழில்நுட்பம் மூலம் தொலைதூர வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் வசிக்கும் அனைவருக்கும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேர்தல் யோசனையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இவ்வாறு தேர்தல் நடத்தப்படும் போது வாக்கு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஆணையம் கருதுகிறது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடிந்தால், வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரிக்கும். தற்போது இதற்கு இடையூறாக வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளுக்கு செல்வதில் சிரமம் உள்ளது.

இந்நிலையில் இந்த வரைவு திட்டம் அரசியல் கட்சிகளின் ஒப்புதலுக்காக விரைவில் விளக்கப்படும்.

வரும் லோக்சபா தேர்தலிலாவது இதுபோன்ற ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே தேர்தல் கமிஷனின் நோக்கம். இந்த வரைவுதிட்டம் குறித்து 16 அரசியல் கட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கும்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *