4,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு – வீதிக்கு வந்த முஸ்லிம்கள்!

Share this News:

புதுடெல்லி (02 ஜன 2023): உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தெருக்களில் குவிந்தனர்.

கஃபுர் பஸ்தி என்று அழைக்கப்படும் ஹல்த்வானி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை” வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், 78 ஏக்கர் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி, 4,365 கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கஃபுர் பஸ்தியில் வசிப்பவர்கள் வெளியேற ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தில் தெருக்களில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தாங்கள் வீடிழந்து, பள்ளி செல்லும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே இப்பகுதியில் சுமார் 29 ஏக்கர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான மாஸ்டர் பிளான் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஹல்த்வானியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுமித் ஹிருதயேஷ், சமாஜ்வாதி கட்சியின் பொறுப்பாளர் அப்துல் மத்தின் சித்திக் மற்றும் பொதுச் செயலாளர் ஷோப் அகமது ஆகியோர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளரும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-எதிஹாத் உல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) மாநிலத் தலைவர் டாக்டர் நய்யார் காஸ்மி, இந்திரா நகர், பன்புல்புரா, ஹல்த்வானி ஆகிய இடங்களில் ரயில்வே துறையின் ஆக்கிரமிப்பு குறித்து மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

4,500 குடும்பங்கள் எழுபத்தெட்டு தசாப்தங்களுக்கும் மேலாக இங்கு வசிப்பதாகவும், மின் இணைப்புகள், வீட்டு வரிகள், ஜல் சன்ஸ்தான் இணைப்புகள் மற்றும் பிற வீட்டுச் சான்றுகள் உள்ளதாகவும் அவர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஒருதலைப்பட்சமான முடிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிதைந்து போகாமல் இருக்க, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தரப்பையும் அரசு உயர் நீதிமன்றத்தின் முன் கொண்டு வர வேண்டும், இதனால் அவர்கள் வீடற்ற நிலையில் இருந்து காப்பாற்ற முடியும்,” என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், டெல்லியைச் சேர்ந்த பிரபல காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் அர்ஃபா கானம், உத்தர்காண்டில் உள்ள பாரதிய ஜனதா (பாஜக) அரசாங்கம் முஸ்லிம்கள் பகுதி என்பதால் அவர்களை குறி வைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நீதித்துறையை மதிக்கிறோம், ஆனால் ஐம்பதாயிரம் பேரை வீடற்றவர்களாக ஆக்குவது என்ன வகையான நீதி, ஆனால் அவர்களின் மறுவாழ்வுக்கான எந்த ஏற்பாடுகளையும் நீங்கள் செய்யவில்லை என்று கானம் கூறினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *