இந்நேரம்

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 15ஆம் தேதியை சர்வதேச இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாளாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறுபான்மையினருக்கு எதிரான இழிவான…

மேலும்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள், பள்ளிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இந்துத்துவா அமைப்புகள் மற்றும் குருபா சமூக அமைப்புகள் நடத்திய ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை…

மேலும்...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை எட்டயார் தெருவில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சூர்யபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில்…

மேலும்...

சவூதியில் மழை, புழுதிக் காற்று தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆசிர், அல்பாஹா, ஹைல், அல் காசிம், நஜ்ரான், ஜிசான் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. மக்கா, ரியாத், அல் ஜூஃப், வடக்கு எல்லை, மதீனா, கிழக்கு மாகாணம் மற்றும் அல் காசிம் ஆகிய இடங்களில்…

மேலும்...

72 நாடுகளுக்கு சவூதி பேரீச்சம்பழம் இலவச விநியோகம் தொடங்கியது!

ஜித்தா (13 மார்ச் 2023) 72 நாடுகளுக்கு இந்த ஆண்டுக்கான சவூதி பேரீச்சம்பழ இலவச விநியோகம் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு பேரீச்சம் பழங்களை பரிசாக வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 140 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைகின்றனர். பேரிச்சம்பழம் பரிசளிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் உள்ள 72 நாடுகளுக்கு இம்முறை பேரிச்சம்பழம்…

மேலும்...

ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம் பெண் மீது தாக்குதல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்டனம்!

புதுடெல்லி (13 மார்ச் 2023): ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன், ரிக்ஷாவில் பயணித்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை குழந்தைகள் குழு ஒன்று தாக்கும் காட்சிகள் வெளியாகின. பெண்களின் எதிர்ப்பையும் மீறி…

மேலும்...

ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை VIDEO

புதுடெல்லி (11 மார்ச் 2023): ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​ஜப்பானிய பெண்ணை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை இளைஞர்கள் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், இளைஞர்கள் குழு ஒன்று சிறுமியை கீழே பிடித்து வலுக்கட்டாயமாக வர்ணம் பூசி அவள் முகத்தில் தெளித்து, அவள் தலையில் முட்டைகளை வீசுகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும்...

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் குற்றம் சாட்டி, அடித்துக் கொலை செய்த பசு பயங்கரவாதிகள்

பாட்னா (11 மார்ச் 2023): பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பசு பயங்கரவாத கும்பல் தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் நசீம் குரேஷி. 55 வயது முதியவரான இவர் தனது உறவினர் பேரோஷ் குரேஷி என்பவருடன் சேர்ந்து ஜோகியா கிராமத்திற்குச்…

மேலும்...

முஸ்லிம்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை (11 மார்ச் 2023): இஸ்லாமியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முஸ்லிம்களுக்கும் திராவிட அரசியலுக்கும் உள்ள உறவை யாராலும் உடைக்க முடியாது. அப்பாவி முஸ்லீம்களை விசாரணையின்றி பத்து இருபது வருடங்கள் சிறையில் அடைக்கும்…

மேலும்...

காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இணைய வேண்டும் – கம்யூனிஸ்ட் தலைவர் அதிரடி!

தோஹா (10 மார்ச் 2023): எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆனி ராஜா கூறினார். யுவ கலாசாஹிதி 17வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அனி ராஜா தோஹா வந்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸை ஒதுக்கி வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்கொள்ள முடியாது. பிராந்தியக் கட்சிகளும், தேசிய அளவில் பலம் வாய்ந்த காங்கிரஸும் ஒன்றுபட்டால் மட்டுமே…

மேலும்...