இந்நேரம்

72 நாடுகளுக்கு சவூதி பேரீச்சம்பழம் இலவச விநியோகம் தொடங்கியது!

ஜித்தா (13 மார்ச் 2023) 72 நாடுகளுக்கு இந்த ஆண்டுக்கான சவூதி பேரீச்சம்பழ இலவச விநியோகம் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு பேரீச்சம் பழங்களை பரிசாக வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 140 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைகின்றனர். பேரிச்சம்பழம் பரிசளிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் உள்ள 72 நாடுகளுக்கு இம்முறை பேரிச்சம்பழம்…

மேலும்...

ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம் பெண் மீது தாக்குதல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்டனம்!

புதுடெல்லி (13 மார்ச் 2023): ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன், ரிக்ஷாவில் பயணித்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை குழந்தைகள் குழு ஒன்று தாக்கும் காட்சிகள் வெளியாகின. பெண்களின் எதிர்ப்பையும் மீறி…

மேலும்...

ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை VIDEO

புதுடெல்லி (11 மார்ச் 2023): ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​ஜப்பானிய பெண்ணை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை இளைஞர்கள் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், இளைஞர்கள் குழு ஒன்று சிறுமியை கீழே பிடித்து வலுக்கட்டாயமாக வர்ணம் பூசி அவள் முகத்தில் தெளித்து, அவள் தலையில் முட்டைகளை வீசுகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும்...

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் குற்றம் சாட்டி, அடித்துக் கொலை செய்த பசு பயங்கரவாதிகள்

பாட்னா (11 மார்ச் 2023): பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பசு பயங்கரவாத கும்பல் தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் நசீம் குரேஷி. 55 வயது முதியவரான இவர் தனது உறவினர் பேரோஷ் குரேஷி என்பவருடன் சேர்ந்து ஜோகியா கிராமத்திற்குச்…

மேலும்...

முஸ்லிம்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை (11 மார்ச் 2023): இஸ்லாமியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முஸ்லிம்களுக்கும் திராவிட அரசியலுக்கும் உள்ள உறவை யாராலும் உடைக்க முடியாது. அப்பாவி முஸ்லீம்களை விசாரணையின்றி பத்து இருபது வருடங்கள் சிறையில் அடைக்கும்…

மேலும்...

காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இணைய வேண்டும் – கம்யூனிஸ்ட் தலைவர் அதிரடி!

தோஹா (10 மார்ச் 2023): எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆனி ராஜா கூறினார். யுவ கலாசாஹிதி 17வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அனி ராஜா தோஹா வந்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸை ஒதுக்கி வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்கொள்ள முடியாது. பிராந்தியக் கட்சிகளும், தேசிய அளவில் பலம் வாய்ந்த காங்கிரஸும் ஒன்றுபட்டால் மட்டுமே…

மேலும்...

சவுதி தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 93 சதவீதம் அதிகரிப்பு!

ரியாத் (10 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் தொழில் துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 93% அதிகரித்துள்ளது என்று தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் 33,000 பேர் பணிபுரிந்தனர். 2022ஆம் ஆண்டின்…

மேலும்...

இது தமிழ்நாடு உத்திர பிரதேசமல்ல – ஆளுநருக்கு கி.வீரமணி எச்சரிக்கை!

சென்னை (10 மார்ச் 2023): தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது 2024 இல் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடு இதற்கான திருப்பத்தை இந்திய அளவில் அளிக்கும்! என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திராவிட தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்று அமையப் பெற்ற தி.மு.க. ஆட்சி கடந்த 22 மாதங்களில் நிகழ்த்திய சாதனைகள் காரணமாக,…

மேலும்...

ஆன்லைன் சூதாட்டம் – ஜவாஹிருல்லா முக்கிய அறிக்கை!

சென்னை (10 மார்ச் 2023): ஆன்லைன் ரம்மிஉள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக்கோரியும் வரும் 17ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகைமுன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத்தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருஅவர்களின்…

மேலும்...

சவூதி விமான நிலையங்களில் பெண் டாக்சி ஓட்டுநர்கள் நியமனம்!

ரியாத் (09 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் பெண் டாக்சி ஓட்டுனர்களை நியமிக்கவும், பெண்களுக்காக சிறப்பு பாதை அமைக்கவும் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரியாத், ஜித்தா, தம்மாம் மற்றும் மதீனா விமான நிலையங்களில் பெண் ஓட்டுனர்களின் சேவை புரிவர். இரண்டாவது கட்டத்தில், இந்தத் திட்டம் சவூதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பாக விமான நிலைய டாக்ஸி நிறுவனங்களுடன் போக்குவரத்து ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது…

மேலும்...