இந்நேரம்

ஒரு வதந்தி பரவிய நிலையில் அடுத்த வதந்தி – பாஜக பிரமுகரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைவு!

சென்னை (05 மார்ச் 2023): தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பிய உத்திர பிரதேச பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்வ்வை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய உ.பி. பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் டெல்லிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் பிரசாந்த் உமாராவை கைது செய்ய தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர்…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா!

அதிராம்பட்டினம் (03 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட திமுக பொருளாளராக அதிராம்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதற்கான அலுவலகம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இன்று (03 மார்ச் 2023) வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் திமுக கொடியினையும் ஏற்றி வைத்தார். இதில் அதிராம்பட்டினம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார திமுக பிரமுகர்கள்,…

மேலும்...

சவுதி அரேபியாவில் வங்கி மோசடி கும்பல் கைது!

ரியாத் (03 மார்ச் 2023): : சவுதி அரேபியாவில், வங்கி மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அலைபேசியில் அழைத்து வங்கி விவரங்களை கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். வங்கி அதிகாரிகள் போல் நடித்து பலரை இவர்கள்…

மேலும்...

அடுத்த பிரதம வேட்பாளராகும் முதல்வர் ஸ்டாலின் – தேசிய அரசியலில் பரபரப்பு!

சென்னை (02 மார்ச் 2023): இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஸடாலினை வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சியின்…

மேலும்...

அதிராம்பட்டினம் அருகே உள்ள பிரைம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!

பட்டுக்கோட்டை (02 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரைம் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் 2 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா கடந்த 26 பிப்ரவரி மாதம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திரு மோகன சுந்தரம் கலந்துகொண்டு நகைச்சுவையாக பேசி பார்வையாளர்களை கலகலப்பூட்டினார். மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற…

மேலும்...

தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

சென்னை (01 மார்ச் 2023): தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும்…

மேலும்...

தமிழ்நாட்டின் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி!

சென்னை (01 மார்ச் 2023): தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன. தி.மு.க….

மேலும்...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (01 மார்ச் 2023): தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 1) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி…

மேலும்...

அதானி விவகாரம் ஊடகங்களில் வெளியாவதை தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (25 பிப் 2023): அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடுக்காது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெளிவுபடுத்தினார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை நீதிமன்றம் உத்தரவிடும் வரை நிறுத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க மனுதாரரை கேட்டுக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி பி.எஸ்.நரசிங்க மற்றும் ஜே.பி.பர்திவாலா…

மேலும்...

சவூதியில் நிலநடுக்கத்திலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க புதிய கட்டிட குறியீடு

ஜித்தா (25 பிப் 2023): சவுதி அரேபியாவில் புதிய கட்டிடக் குறியீடு அமலுக்கு வந்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ள பொறியியல் அலுவலகங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளைத் தயாரிக்கும் போது, ​​நிலநடுக்கத்தைத் தடுப்பது தொடர்பான விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு, சவூதியின் பொறியியல் அலுவலகங்களை நகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன பொறியியல் நிறுவனங்கள் கட்டிடங்களையும்…

மேலும்...