சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்!

கொல்கத்தா (20 ஜூன் 2020): சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் இன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர். லடாக் எல்லையில் சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சீனா மற்றும் அந்நாட்டு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகள்…

மேலும்...

சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை – பிரதமர் மோடி!

புதுடெல்லி (19 ஜூன் 2020): இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய- சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீன…

மேலும்...

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

புதுடெல்லி (19 ஜூன் 2020): உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 13,586 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 336 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 12,573 பேர் உயிரிழந்த நிலையில் 2,04,711 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 120,504…

மேலும்...

மணிப்பூரில் கவிழ்கிறது பாஜக ஆட்சி – ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரல்!

மணிப்பூர் (18 ஜூன் 2020): மணிப்பூரில் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் காங்கிரஸை விட குறைவாக 21 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ., கட்சிக்கு 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி, மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை , ஏ.ஐ.டிசி…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பரிதாபம் – இறந்த கொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் அஜாக்கிரதை!

காசியாபாத் (18 ஜூன் 2020): உத்திர பிரதேசம் காசியாபாத்தில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு நபரின் உடல், தகனத்தின் போது மின்சார தகனம் செயலிழந்த்தால் உடல் பாதி எரிந்து அநாதையாக கிடந்துள்ளது. 58 வயதான தொழிலதிபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் காசியாபாத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய திங்கள் கிழமை காலை 11 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும்போது நடுப்பகுதியில் தகனம் செய்யும் எந்திரம் வேலை செய்யவில்லை….

மேலும்...

ரூ 57 கோடி வங்கி மோசடி – பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு!

மும்பை (17 ஜூன் 2020): ரூ 57 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட மும்பை பாஜக தலைவர் மோகித் கம்போஜ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவியான் ஓவர்ஸீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவன நிர்வாக இயக்குநர் மோகித் பேங்க் ஆஃப் இந்தியாவில் பெற்ற கடனை திருப்பி அடைக்காமல் அந்த தொகையில் மோகித் நிறுவன நிர்வாக இயக்குநர் பெயரில் பிளாட் ஒன்று வாங்கியிருப்பது வங்கி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த தொகையை வராக்கடன் பட்டியலில்…

மேலும்...

முதலில் நெகட்டிவ் தற்போது பாஸிட்டிவ் – அமைச்சரை தாக்கிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (17 ஜூன் 2020): டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா…

மேலும்...

இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்பவுள்ளேன் – சீனா எல்லையில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம்!

பாட்னா (17 ஜூன் 2020): சீனா இந்தியா இடையேயான மோதலில் உயிரிழந்த வீரர் அமன்குமார் சிங்கின் தம்பியையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பவுள்ளதாக அமனின் தந்தை தெரிவித்துள்ளார். பீகார் சமஸ்திபூர் மாவட்டத்தில் மொஹியுதீன் நகரில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமன் குமார். இவர் ஜூன் 15 ஆம் தேதி இரவு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களுக்கும் சீன இராணுவத்தின் (பி.எல்.ஏ) படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிர் இழந்தார். அமன் குமாருக்கு மனைவி மினு தேவி, தந்தை…

மேலும்...

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பிரபலம் கைது!

புதுடெல்லி (17 ஜூன் 2020): அரசு அதிகாரியை செருப்பால் அடித்த டிக்டாக் பிரபலமும், பாஜக தலைவருமான சோனாலி போகத், கைது செய்யப்பட்டுள்ளர். அரியானாவில் டிக்டாக் மூலம் பிரபலமாகி பாஜ.வில் சேர்ந்தவர் சோனாலி போகத். இவர் கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் அரசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்…

மேலும்...

இந்திய சீன எல்லை மோதல் – மேலும் நான்கு இந்திய வீரர்கள் கவலைக்கிடம்!

லடாக் (17 ஜூன் 2020): லடாக் இந்திய சீன ராணுவ வீரகளுக்கிடையேயான மோதலில் காயமடைந்த மேலும் நான்கு வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தியா தரப்பில் காயமடைந்த மேலும் நான்கு ராணுவ வீரர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக…

மேலும்...