இந்திய சீன எல்லையில் வீரர்கள் சாவு – பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (17 ஜூன் 2020): லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த…

மேலும்...

இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 43 சீன ராணுவ வீரர்கள் பலி!

லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததக ஏ என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியா தரப்பில்…

மேலும்...

இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் பலி – பரபரப்பு தகவல்!

லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு நடைபெற்ற இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதாக லடாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு  இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ஜவான்கள் என மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்…

மேலும்...

இதுதான் குஜராத் மாடல் – கொரோனா உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான்: ராகுல் காந்தி!

புதுடெல்லி (16 ஜூன் 2020): நாட்டில் குஜராத் மாநிலத்திலேயே கொரோனா உயிரிழப்புகள் அதிகம் காணப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக குஜராத் மாடலை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை கைபற்றியது. ஆனால் பல விவகாரங்களில் குஜராத்தின் உண்மை முகம் அம்பலப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான் என்று ராகுல் காந்தி புள்ளி விவரங்களுடன் விவரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில்…

மேலும்...

கொரோனா நோயாளிகளுக்காக விப்ரோ ஐடி நிறுவனத்தை மருத்துவமனையாக மாற்றிய அஜீம் பிரேம்ஜி!

புனே (15 ஜூன் 2020): கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அஜீம் பிரேம்ஜியின் புனே ஐடி நிறுவனம் 450 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நிதியுதவி அளித்தவர்களில் உலகின் மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளராக உள்ளவர் விப்ரோ நிறுவன தலைவர் அஜீம் பிரேம்ஜி. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் , இந்தியாவின் முன்னணி வணிக அதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி, கொரோனா…

மேலும்...

இந்திய தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்தது!

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): பாகிஸ்தானில் கைதான இரு தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்துள்ளது. இன்று (திங்கள் கிழமை) காலை தூதரகம் வந்து சேரவேண்டிய இரு அதிகாரிகள் தூதரகம் வந்து சேரவில்லை என்றும். அவர்களை இன்று காலை முதல் காணவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவ்விருவரும் சாலை விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக…

மேலும்...

மிகவும் எளிமையாக நடந்த கேரள முதல்வர் மகள் – முஹம்மது ரியாஸ் திருமணம்!

திருவனந்தபுரம் (15 ஜூன் 2020): கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா முஹம்மது ரியாஸ் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். தைக்கண்டியேல், மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவரான முகமது ரியாஸை இன்று மறுமணம் செய்து கொண்டார். திருவனந்தபுரத்தில் மிக எளிமையாக இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் வீணா. அதேபோல மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர்…

மேலும்...

பாகிஸ்தானில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகள் மிஸ்ஸிங்!

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): இஸ்லாமாபாத்தில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகளை காணவில்லை என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ திங்களன்று தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் விசா பிரிவில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் உள்ள பல உயர்மட்ட இந்திய தூதரக அதிகாரிளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தித்தும், அதிகப்படியான கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

புதுடெல்லி (14 ஜூன் 2020): இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்கியிருந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது, விசா நடைமுறையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது தனிமைப்படுத்தல் காலங்களும் முடிவடைந்தன. இந்நிலையில் வெளிநாட்டு ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு…

மேலும்...

கொடூரத்தின் உச்சத்தை தொட்ட அரசு அதிகாரிகள் – உ.பி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

லக்னோ (14 ஜூன் 2020): உயிரிழந்த சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றும் சம்பவம் தொடர்பாக உபி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம், பல்ராம்பூர் மாவட்டம் உத்ராவுலா நகரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் முன் 42 வயதுடைய ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு கொரோனா வந்திருக்குமோ என அஞ்சி அவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் குப்பைபோடு குப்பையாக நகராட்சி ஊழியர்கள் 4 பேர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் 3…

மேலும்...