பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் யோசனை!

சென்னை (15 ஜன 2020): பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யோசனை வழங்கியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ட்விட்டரில் சிஏஏ தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவர், “பிரதமர் மோடி, சிஏஏ குடியுரிமை வழங்குவதற்குத்தான், குடியுரிமையைப் பறிப்பதற்கு அல்ல என்கிறார். எங்களில் பலபேர், சிஏஏ பல மக்களின் குடியுரிமையை எடுத்துவிடும் என எண்ணுகிறோம். மோடி உயர்வான இடங்களில் இருந்துகொண்டு அமைதியான, கேள்வி கேட்க முடியாத மக்களிடம் பேசுகிறார். நாங்கள் ஊடகத்தின் வழி பேசுகிறோம்….

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு அடுத்த நெருக்கடி – கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்ட மனறத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நிலையில், அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், கேரள அரசு, சிஏஏ இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் பல பிரிவுகளை மீறுவதாகவும், அனைவருக்கும் சம உரிமை என்பதை மறுப்பதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும், அதேபோல, 2015…

மேலும்...

காஷ்மீரில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

ஸ்ரீநகர் (15 ஜன 2020): காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அங்கு பல மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுகிறது. குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம், பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நவுகாம் செக்டார் பகுதியில்…

மேலும்...

உயிருடன் புதைத்துவிடுவேன் – பாஜக பிரமுகர் மிரட்டல் பேச்சு!

அலிகார் (14 ஜன 2020): பிரதமர் மோடி குறித்து பேசுபவர்களை உயிருடன் புதைத்துவிடுவேன் என்று பாஜக பிரமுகர் வெறித்தனமாக பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள்…

மேலும்...

மாணவர்களை நேரடியாக சந்திக்க தைரியம் உண்டா? – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (13 ஜன 2020): மாணவர்களை சந்திக்க மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த…

மேலும்...

நிதிஷ்குமார் திடீர் மாற்றம் – பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்பு!

பாட்னா (13 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளமை பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது….

மேலும்...

வரலாற்றில் எழுதப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டம்!

புதுடெல்லி (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர்…

மேலும்...

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் யார் என்பது தெரிந்தது!

புதுடெல்லி (13 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் ஏபிவிபியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 5 ம் தேதி டில்லி ஜே.என்யு.,வில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைக் கொண்டு…

மேலும்...

டெல்லியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு!

புதுடெல்லி (13 ஜன 2020): குடியுரசுதினக் கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு சுமாா் 1.45 மணி நேரம் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படாது என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜனவரி 18, 20, 21,22,23,24, 26 ஆகிய தேதிகளில் காலை 10. 35 மணி முதல் 12.15 மணி வரை தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் நடந்தது என்ன? – மழுப்பும் காவல்துறை!

மீரட் (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்து போலீசார் சரியான தகவல் சொல்லவில்லை என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, இதுவரை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே பலர் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டத்தை கலைப்பதற்காக காவலர்கள்…

மேலும்...